நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
லாரி கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து நெல் மூட்டைகளை டிரைவர் ஜாகிர் உசேன் (வயது 45) என்பவர் லாரியில் ஏற்றிக் கொண்டு காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, லாரி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெல் மூட்டைகள் சிதறியது. டிரைவர் ஜாகிர் உசேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story