நன்னிலம் அருகே சாலையில் லாரி கவிழ்ந்தது

நன்னிலம் அருகே சாலையில் லாரி கவிழ்ந்தது

விபத்து 

நன்னிலம் அருகே சாலையில் லாரி கவிழ்ந்தது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் காரைக்கால் துறைமுகத்திலிருந்து லாரியில் ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூர் டால்மியா சிமெண்ட் கம்பெனி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது நன்னிலம் அருகே வாழ்க்கை கிராமம் வழியாக லாரி சென்ற போது கும்பகோணத்திலிருந்து நன்னிலம் நோக்கி மற்றொரு லாரி வந்துள்ளது . இதனால் இடது பக்கம் ஒதுங்கிய போது சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் ஜிப்சம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் ராஜ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Tags

Next Story