பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தற்கொலை

திருப்பத்தூர் அடுத்த மாக்கனூர் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாக்கனூர் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு இவருக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் பிள்ளை உள்ளது இவரது இரண்டாவது மகன் ரூபிகா வயது (17)திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள் ரூபிகா அவரது தந்தையிடம் எனக்கு நோட்டு புத்தகம் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன் நாளை நோட்டு புத்தகம் வாங்க பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு தன் மகனை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் ரூபிகா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகு நேரம் கதவு திறக்காததால் அவரது பாட்டி ஜன்னல் வழியாக பார்க்கும்போது ருபிகா தூக்கில் தொங்கி நிலையில் இருப்பதை பார்த்து கத்தி கதறி அழுவதை பார்த்த அவரது உறவினர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நோட்டு புத்தகம் வாங்க பணம் கொடுக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story