சாலையில் தீ பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் - ஆம்பூரில் பரபரப்பு

சாலையில் தீ பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் - ஆம்பூரில் பரபரப்பு
தீயை அணைக்கும் பணி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்வைத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்த அப்சான் என்பவர் ஆம்பூர் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் கைலாசகிரி பகுதியில் இருந்து மேல்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அப்சான் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அப்சான் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றுள்ளார், ஆனால் அதற்குள் தீ இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி கொளுந்து விட்டு எரியத்தொடங்கி சாலை முழுவதும் புகை சூழ்ந்தது. இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் தீயணைப்பு கருவி கொண்டு தீயை அணைத்தனர், அதற்குள் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது, இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story