நதத்ம் அருகே இருசக்கர வாகனம் தடுப்பில் மோதி விபத்து

நதத்ம் அருகே இருசக்கர வாகனம் தடுப்பில் மோதி விபத்து

கோப்பு படம் 

நதத்ம் அருகே இருசக்கர வாகனம் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பரளிபுதூர் இந்திராநகரை சேர்ந்தவர் சூர்யா (25). அதே பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (26). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். லிங்கவாடி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.

இதில் இருவரும் கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு ஏற்பட்டு பலத்த பலத்த காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் மேல் 2 சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story