டிராக்டர் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து - இருவர் படுகாயம் !

டிராக்டர் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து - இருவர் படுகாயம் !

விபத்து

முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.இருவர் படுகாயம் அடைந்தனர்.
முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 63. அதே பகுதியை சேர்ந்த சுப்பன் மனைவி சுந்தரி. இவர்கள் இருவரும் மார்ச் 24ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில், கரூர் மாவட்டம், மைலம்பட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் தரகம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையம் பகுதியில் சென்ற போது, இவர்களுக்கு முன்னால் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் ஓட்டிச் சென்ற டிராக்டர், எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், டிராக்டருக்கு பின்னால் டூவீலரை ஓட்டி வந்த தங்கவேல் வாகனம், டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த தங்கவேலுக்கு வலது கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த சுந்தரிக்கும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கவேலுவின் உறவினர், கரூர் எல்ஜிபி நகரை சேர்ந்த ராமசாமி வயது 42 என்பவர், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டு விபத்து ஏற்பட காரணமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிபட்டி காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story