சிறுவன் ஓட்டி சென்ற டூவீலர் மோதி நடந்து சென்ற கணவன்-மனைவி மீது விபத்து. மூன்று பேர் படு காயம்.

நடந்து சென்ற கணவன்-மனைவி மீது,சிறுவன் ஓட்டி சென்ற டூவீலர் மோதி விபத்து. மூன்று பேர் காயம். காவல்துறை வழக்கு பதிவு.
நடந்து சென்ற கணவன்-மனைவி மீது,சிறுவன் ஓட்டி சென்ற டூவீலர் மோதி விபத்து. மூன்று பேர் படு காயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் பிரபு வயது 30. இவரது மனைவி கல்பனா வயது 29. இவர்கள் இருவரும் ஜனவரி 27ஆம் தேதி காலை 7 மணி அளவில் பள்ளப்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூ வீலர், வேகமாக சென்று நடந்து சென்ற மணிகண்டன் மற்றும் கல்பனா மீது பின்னால் மோதி வாகனத்துடன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன், கல்பனா, 17 வயது சிறுவன் என மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். .

Tags

Next Story