நடந்து சென்ற பெண்மீது டூ வீலர் மோதி விபத்து

கரூரில் நடந்து சென்ற பெண்மீது இளைஞர் ஓட்டிய டூ வீலர் மோதிய விபத்தில் அப்பெண் படுகாயம் அடைந்தார்.
நடந்து சென்ற பெண்மீது இளைஞர் ஓட்டிய டூ வீலர் மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மஞ்ச புலிப்பட்டி அருகே உள்ள கன்னிமார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாவி மனைவி வளர்மதி வயது 38. இவர் மே 4-ம் தேதி காலை 7:30 மணியளவில், கன்னிமார் பாளையத்திலிருந்து வாழ்வார்மங்கலம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில், எதிர் திசையில், கடவூர் தாலுக்கா, கீரனூர், சீலைகட்டியூர் பகுதியைச் சேர்ந்த பிச்சை மகன் பாலமுருகன் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற வளர்மதி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வளர்மதிக்கு வலது கால் மற்றும் வலது கை மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வளர்மதி அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story