நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் வையாபுரி வயது 78. இவர் பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பள்ளப்பட்டி தமிழ் நகர் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று நடந்து சென்ற வையாபுரி மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வையாபுரிக்கு தலையில் உள் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த வையாபுரி சிகிச்சை பலன் இன்றி பிப்ரவரி 16ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த வையாபுரியின் மகன் பொன்ராமன் வயது 57 என்பவர், இது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் நாகராஜன், முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற டூ வீலரை ஓட்டிச் சென்ற நபர் யார்? அந்த டூவீலர் எது? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story