இரண்டு வயது குழந்தையை நாய் கடித்து குதறிய கோர சம்பவம்

இரண்டு வயது குழந்தையை நாய் கடித்து குதறிய கோர சம்பவம்

 குழந்தையை நாய் கடித்து குதறிய கோர சம்பவம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட காந்தி புரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சங்கவி (27), இவருக்கு எவினேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் எவினேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான், அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த சில நாய்கள் சிறுவனை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து நாய்களை துரத்தி சிறுவனை மீட்டனர், இதில் சிறுவனின் முகம் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதையடுத்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, 2 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story