லாரி மீது வேன் மோதி விபத்து

லாரி மீது வேன் மோதி விபத்து

சாலை விபத்து

லாரி மீது வேன் மோதி 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து! 3 பேர் படுகாயம்! கர்நாடக மாநிலம் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி குடும்பத்தினர் இன்று திருத்தணி கோவிலுக்கு டெம்போ ட்ராவல் வேன் மூலம் 11பேர் சென்றனர் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கண்டைனர் லாரியின் மீது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பயணித்த அருள், பிரபாகர், பாலாஜி ஆகிய மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பிரபாகர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்காக மேல் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story