வைக்கோல் ஏற்றி வந்த வேனில் திடீரென தீ

பர்கூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த வேன் தீப்பற்றி எரிந்த, சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பர்கூர் அருகே வைக்கோல் ஏற்றிவந்த பிக்கப்வேன் தீப்பற்றி எரிந்து வந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது : அங்கிருந்த பொதுமக்கள் வண்டியை நிறுத்தி தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் முகிலன் அவருக்கு சொந்தமான பிக்கப் வேனில் கள்ளக்குறிச்சியில் இருந்து கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல்களை ஏற்று வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பர்கூருக்கு வைகோலை ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது மலப்பாடி பகுதியில் சாலையில் தாழ்வாக இருந்த மின் கம்பிகள் உரசியதில் வைகோல் மீது தீ பற்றியுள்ளது.

இதில் பிக்கப்வேனில் இருந்த வைக்கோல் எரிந்துள்ளது இதனை அறியாத ஓட்டுநர் வண்டியை ஓட்டி வேகமாக வந்துள்ளார். அப்பொழுது வைக்கோல் ஏற்றி வந்த பிக்கப் வேன் எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் வண்டியை விரட்டிச் சென்று நிறுத்தி தீயை அணைத்துள்ளனர். மேலும் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் வண்டியின் மேல் பகுதி மட்டும் சேதம் அடைந்தது. இந்த தீ பற்றி எரிந்த பிக்கப் வேன் வரும் பொழுது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோவானது தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story