போதை நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

போதை நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

வைரல் வீடியோ 

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர் பகுதிக்குள் புகுந்தது.இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ,சிறுவர்கள் வெள்ள நீரில் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.அப்போது போதையில் இருந்த நபர் ஒருவர் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை பாடலையும், ஏமாற்றாதே ஏமாற்றாதே பாடலையும் பாடிக் கொண்டிருந்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story