கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

திருவாரூர் மாவட்டம், அச்சுதமங்கலம் பகுதியில் குளிர்பான கடைகாரரிடம் கத்தியை காட்டி இளைஞர்கள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திருவாரூர் அருகில் நன்னிலம் அச்சுதமங்கலம் செட்டி தெரு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது மகன் தேவா. இவர் அச்சுதமங்கலம் கடை தெருவில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் ,அஜய் ஆகியோர் மது போதையில் குளிர்பானம் குடிப்பதற்காக கடைக்கு வந்துள்ளனர் .

அப்போது அந்த இளைஞர்கள் புகையிலை மற்றும் சிகரெட் வேண்டும் என்று குளிர்பான கடையில் கேட்டுள்ளனர். இந்த பொருட்கள் எல்லாம் விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் நீ எதற்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாய் என தரக்குறைவாக பேசி குளிர்பான பாட்டில்கள் உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.A video of a knife threat has gone viral on social media

Tags

Read MoreRead Less
Next Story