நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

திண்டிவனம் தனியார் கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி கிறிஸ் தவ மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசினார். சப்-கலெக்டர் திவ்யான்ஷீ நிகம் முன்னிலை வகித்தார்.மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளர் சோபியா லாரன்ஸ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜோசப்ராஜ், நிர்வாக அலுவலர் சகாயநாதன், முதல்வர் சத்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story