சாலையில் கவிழ்ந்த கோதுமை லாரி

சாலையில் கவிழ்ந்த கோதுமை லாரி

கவிழ்ந்த லாரி 

நாகர்கோவில் அருகே கோதுமை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை மூடைகளை ரயில் மூலம் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த கோதுமைகள் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள மாவு மில்களுக்கு கொண்டு செல்லப்படும். நேற்று பஞ்சாபில் இருந்து ரயில் மூலம் கோதுமை வந்தது. பின்னர் கோதுமை மூடைகளை லாரிகள் முதல் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் கோதுமை முடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரி சுசீந்திரம் ஆனைபாலத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது.இதில் லாரியில் இருந்து கோதுமை மூடைகள் சாலையில் சிதறின. சம்பவ இடத்திற்கு நாகர்கோவில் போக்குவரத்துக் போலீசார் சென்று விசாரணை நடத்தி பின்னர் வேறு லாரிகள் வரவழைக்கப்பட்டு மூடைகளை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story