சாலையோரத்தில் குட்டி ஈன்ற காட்டு யானை!

முதுமலை - தெப்பக்காடு சாலையில் பிறந்த குட்டி யானையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நூற்றுக்கணக்கான யானைகளின் வாழிடமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை கூடலூரில் இருந்து தெப்பக்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்த அந்த குட்டியுடன் சாலை ஓரத்தில் நீண்ட நேரம் முகாமிட்டிருந்தது . பிறந்த குட்டி தாய் யானையின் மடியில் பால் குடிக்கும் காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்தனர். நீண்ட நேரம் சாலை ஓரத்தில், பிறந்த குட்டியுடன் முகாமிட்ட அந்த காட்டு யானை நீண்ட நேரத்திற்கு பிறகு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் தனது குட்டியை அழைத்துச் சென்றது. இந்த காட்சி அந்த வழியாக சென்றவர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story