சாலையில் உலா வந்த காட்டு யானை

சாலையில் உலா வந்த காட்டு யானை

நிறுத்தப்பட்ட வாகனங்கள் 

காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடியை கடந்து செல்வது வாடிக்கையாக வருகிறது இந்த நிலையில் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே காட்டு யானை வந்தது .பின்னர் அந்த யானை ரோட்டில் சிதறி கிடந்த கரும்புகளை துதிக்கையால் எடுத்து தின்றது. யானையை கண்டதும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அப்படியே நிறுத்தினார் .சிறிது நேரம் அங்கும் இங்குமாக உலா வந்த யானை பின்னர் அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இதை தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags

Next Story