காயத்துடன் காட்டு யானை

காயத்துடன் காட்டு யானை

பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே முகத்தில் காயத்துடன் காட்டு யானை சுற்றி வருகிறது.


பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே முகத்தில் காயத்துடன் காட்டு யானை சுற்றி வருகிறது.
தென்காசிமாவட்டம் புளியரை- கேரள எல்லை அருகே பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று காலை முதல் காட்டு ஆண் யானை நீண்ட நேரமாக நின்றது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அதன் வாய்ப்பகுதியில் வீக்கம், காயம் உள்ளது தெரிந்தது. எனவே யானைக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story