திருப்பத்தூர் அருகே ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே ரயில் மோதி பெண் உயிரிழப்பு

வாசுகி

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எல்லையம்மன் கோயில் வட்டம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மனைவி வாசுகி (48) இவர் காக்கங்கரை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story