குப்பைகளை எரித்தபோது தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு!

குப்பைகளை எரித்தபோது தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு!

  தூத்துக்குடியில் குப்பைகளை தீ வைத்து எரித்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

தூத்துக்குடியில் குப்பைகளை தீ வைத்து எரித்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி தெய்வக்கனி (47), இவர் கடந்த ஒன்றாம் தேதி தனது வீட்டு முன்பு குப்பைகளை தீ வைத்து எரித்தபோது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தெய்வக் கனி, சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story