சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் திருட்டு !

சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் திருட்டு !

திருட்டு

சேலம் அருகே ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் செல்போனை கொள்ளையடித்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அந்த வாலிபர் நடந்த சம்பவத்தை கூறி செல்போனை சேலம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு கொடுவேலி பகுதியை சேர்ந்தவர் சபான். இவருடைய மனைவி பர்சனா, டாக்டர். இவர் கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவருடைய கைப்பை மற்றும் செல்போன் திருட்டு போனது. இதையடுத்து அவர் செல்போன் இருக்கும் இடத்தை ஒரு செயலியின் மூலம் கண்டுபிடித்த போது, அது சேலம் ரெயில்வே நிலையம் என்று காட்டியது. உடனே ஈரோடு ரெயில் நிலையத்தில் இறங்கிய அந்த பெண் டாக்டர் சேலத்திற்கு விரைந்து வந்தார். இதனிைடயே விலை உயர்ந்த செல்போன் ஒன்றை சேலம் ரெயில் நிலையம் முன்பு வைத்துக்கொண்டு நின்ற முதியவர் ஒருவர் அந்த செல்போனில் பட்டன் லாக்கை எடுத்து தருமாறு அங்கு நின்ற வாலிபர் ஒருவரிடம் கேட்டு உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் அந்த முதியவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வர முயன்றார். உடனே செல்போனை விட்டு விட்டு அந்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அந்த வாலிபர் நடந்த சம்பவத்தை கூறி செல்போனை சேலம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். அதே நேரத்தில் அங்கு வந்த பெண் டாக்டர் தனது செல்போன் திருட்டு போன விவரங்களை கூறி தனது செல்போனை பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story