கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பைல்படம்

கடையநல்லூா் அருகே கிணற்றில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கம்பனேரியைச் சோ்ந்த சுடலைத்துரை மனைவி வேல்துரைச்சி(33). இவா், அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராமல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாரும், தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான குழுவினா் 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றிலிருந்து வேல் துரைச்சியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story