ஆரணி: துணி துவைத்தபோது ஏரியில் தவறி விழுந்த பெண் பலி

ஆரணி: துணி துவைத்தபோது ஏரியில் தவறி விழுந்த பெண் பலி

நீரில் மூழ்கி உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் கப்பூர்பாய், கூலி தொழிலாளி. இவரது, மனைவி ஷர்மிளா(43), இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ஷர்மிளா இரும்பேடு பெரிய ஏரிக்கு துணி துவைக்க சென்றார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்த போது ஷர்மிளா எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து முழ்கினார். இதனை கண்ட அங்கிருந்த ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சுமார் அரைமணி நேரம் தேடி ஷர்மிளாவை சடலமாக மீட்டு ஆரணி தாலுகா காவல் துறையிடம் ஒப்படைத்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story