தொழுதாவூரில் பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

தொழுதாவூரில் பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

கோப்பு படம்

தொழுதாவூரில் பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியை சேர்ந்தவர் முருகன், 42. இவர் கூலி வேலை செய்து வருகிறார். சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் ஹோட்டல் நடத்தி வரும் வனஜா என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வனஜா 2 லட்சம் ரூபாயை முருகனிடம் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story