பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

குழித்துறை அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிதிருந்த தங்க நகையை பறித்து தப்பி ஓடின மர்ம நபரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் குழித்துறை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி சகுந்தலா (73). இவர் அதே பகுதியில் உள்ள தன்னுடைய மகன் ராஜகுமாரன் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மதியம் வீட்டில் உள்ளவர் அறையில் சகுந்தலா தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துள்ளார். இதில் நகை அறுந்து பாதி அந்த ஆசாமி கைக்கு சென்றது. மீதி நாகை கீழே விழுந்தது. அப்போது கண் விழித்த சகுந்தலா திருடன் என சத்தம் போட்டார். உடனே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பிடிக்க முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் தப்பி விட்டார். இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story