பெட்டிக்கடையில் மது விற்ற பெண் கைது!

பெட்டிக்கடையில் மது விற்ற பெண் கைது!

கைது

பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அருகே சேம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர் அப்போது அந்தப் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவதி (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story