குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

கழுகுமலையில் குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆறுமுகம் நகர் கிரிப்பிரகார மேலவீதி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் வயது (வயது 30). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி அனுசியா (24). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை சுமார் 9 மணியளவில் கணவன்- மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அனுசியா கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குதித்தார்.

நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கழுகுமலை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கயறு கட்டி இறங்கி அனுசியாவை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story