இரண்டு வயது குழந்தையுடன் தீ குளிக்க முயற்சித்த பெண்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டு வயது குழந்தையுடன் பெண் ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு உண்டானது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்பு பட்டி தெருவை சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த காவலர் ராஜபாண்டி என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இராஜபாண்டி தற்போது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புவனேஷ்வரி மற்றும் ராஜபாண்டிக்கும் திருமணம் முடிந்த 2 மாதங்களிலேயே புவனேஷ்வரி கருவுற்ற நிலையில் புவனேஷ்வரி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் காவலர் ராஜபாண்டிக்கும் புவனேஷ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் காவலர் ராஜபாண்டி தன்னுடைய மனைவியிடம் இருந்து விவகாரத்து வழங்கக் கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவனேஸ்வரி தன்னுடைய கணவரான காவலர் ராஜபாண்டி உடன் சேர்த்து வைக்கக் கோரி தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையுடன் தீடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்திற்கு புவனேஸ்வரி மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 வயது பெண் குழந்தையுடன் இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story