மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி!

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி!

பைல் படம்

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48), தொழிலாளி. இவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story