மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி திடீர் சாவு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி திடீர் சாவு
கூலி தொழிலாளி திடீர் சாவு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி திடீர் சாவு. மேலும், இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சியில், வெளிமாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கட்டிட்ட வேலை செய்து வருகின்றனர். ஜார்க்கண்ட்டைச்சேர்ந்த ரம்ஜன்சேக் என்பவருக்கு இரு கைகளிலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்ஜன்சேக் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் ரபிதாஸ் (42) ஆகிய இருவரும், வீரகனூர் ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள வீரகனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நடந்து சென்றனர். அப்போது ஆத்தூரில் இருந்து வீரகனூர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம், சஞ்சய் ரபிதாஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், வீரகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டிற்கு சென்றார். மீண்டும் அடுத்த நாள் அனைவரும் காலையில் வேலைக்கு சென்ற பிறகு, வெகு நேரமாகியும், சஞ்சய்ரபிதாஸ் வேலைக்கு வராததால், சகதொழிலாளர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடம் வந்த வீரகனூர் போலீசார், சஞ்சய்ரபிதாஸ் உடலை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story