குலசேகரம் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது டெம்போ மோதி விபத்து

குலசேகரம் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது டெம்போ மோதி விபத்து

காவல் நிலையம்

குலசேகரம் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத டெம்போ மோதி விபத்துக்குள்ளனது.

குலசேகரம் அருகே கோதையாறு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் பால்வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு இசைக்கி அம்மாள் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர் இவரது மனைவியும் இவருடன் சேர்ந்து பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

இவர் குலசேகரம் நாகக்கோடு பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கி விட்டு ரோட்டை கடக்கும் போது அரச மூட்டில் இருந்து செருப்பாலூர் நோக்கி சென்ற டெம்போ அதிவேகமாக வந்து முருகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. கீழே விழுந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகனின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுயிருக்கிறது தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது முருகனின் மனைவி இசைக்கி அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த பகுதியில் இருக்கும் சிசிவி மேராக்களை ஆய்வு வருகிறார்கள் பால் வெட்டும் தொழிலாளி முருகனை இடித்து விட்டு நிற்காமல் சென்ற டெம்போ டிரைவரை பிடிப்பதற்கான நடவடிக்களை போலிசார் தீவிர படுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story