சாலையில் விழுந்து கிடந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலையில் விழுந்து கிடந்த தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி உயிரிழப்பு

மது போதையில் விபரீதம்
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (38). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசாந்த் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். பிரசாந்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் பிரசாந்த் மது குடித்துவிட்டு அந்த பகுதியில் சாலையோரம் விழுந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த பிரசாந்த்-ன் பெற்றோர் அவரை மீட்டு, கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை பிரசாந்த் இறந்தார். இது குறித்து அவரது தாயார் கிரிஜா குமாரி கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story