ஓடும் பஸ்சில் வேகத்தடையில் இறங்க முயன்ற தொழிலாளி பலி

ஓடும் பஸ்சில் வேகத்தடையில் இறங்க முயன்ற தொழிலாளி பலி

விபத்து 

பனமரத்துப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் வேகத்தடையில் இறங்க முயன்ற தொழிலாளி பஸ் சக்கரத்தில் விழுந்து பலி.
பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி குரங்கு புளியாமரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் நேற்று காலை குரங்கு புளியாமரத்தில் இருந்து சாமகுட்டப்பட்டிக்கு செல்வதற்கு அரசு பஸ்சில் சென்றார். பஸ்சில் அவர் முன்பக்க படிக்கட்டில் நின்று சென்றார். கூட்டாறு பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது சேகர் படிக்கட்டில் இருந்து திடீரென இறங்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பஸ்சின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story