செய்யாறு அருகே இளம்பெண் மாயம்

செய்யாறு அருகே இளம்பெண் மாயம்

காவல் நிலையம்

செய்யாறு அருகே இளம்பெண் மாயமனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு சென்றதாகவும், ஆனால் அன்று மாலை அந்த இளம் பெண் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லைஎன்பதனால் இளம் பெண்ணின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story