திருக்காட்டுப்பள்ளியில் இளம்பெண் மாயம்

திருக்காட்டுப்பள்ளியில் இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு கிறிஸ்துவ 'தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் மகள் 19 வயதுடைய பெண். இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த நான்கு மாதங்களாக திருச்செங்கோட்டில் உள்ள பஞ்சு மில்லில் வேலை செய்து வந்துள்ளார். தேர்தலுக்காக வீட்டுக்கு வந்தவர் கடந்த 21 ம் தேதி மதியம் எங்கு சென்றார் என்று தெரியவில்லையாம். அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்இது குறித்து திருக்காட்டுப் பள்ளி போலீசில் சோபியாவின் தாய் ரெஜினா மேரி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags

Next Story