மாடியிலிருந்து தவறி விழுந்த பட்டதாரி இளைஞா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்த பட்டதாரி இளைஞா் உயிரிழப்பு

இளைஞர் பலி

திருச்சியில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் புகழேந்தி (24). பட்டதாரியான இவா் தச்சு வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை செங்குளம் காலனியில் உள்ள குடியிருப்பின் 2ஆவது மாடியில் உட்காா்ந்திருந்தவா், எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புகழேந்தி திங்கள்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story