ஊத்தங்கரை அருகே மனைவி விட்டுச்சென்ற மனவிரட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

ஊத்தங்கரை அருகே மனைவி விட்டுச்சென்ற மனவிரட்டியில் ரயில் முன் பாய்ந்து  இளைஞர் தற்கொலை
ஊத்தங்கரை அருகே மனைவி பிரிந்து சென்ற மன வருத்தம் காரணமாக, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
*ஊத்தங்கரை அருகே தற்கொலை: ரயில் முன் பாய்ந்து இறந்த இளைஞர்* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டி ரயில் நிலையம் அருகே சேலம்-சென்னை ரயில்வே பாதையில், கெங்காபுரம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடி சாமி (வயது 24) என்பவர், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளில் மனைவி பிரிந்து சென்ற மன வருத்தம் காரணமாக, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை, வேடி சாமி ரயில்வே பாதையில் சடலமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் மனைவி பெயர் ஜோதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story