ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

திருச்சி -கரூா் மாா்க்கத்தில், தேவஸ்தான ரயில்வே கேட் அருகில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி -கரூா் மாா்க்கத்தில், பேட்டைவாய்த்தலை அருகே, தேவஸ்தான ரயில்வே கேட் அருகில், வெள்ளிக்கிழமை மாலை இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜான்சன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இறந்து கிடந்த நபருக்கு சுமாா் 25 வயது இருக்கும். அவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. திருச்சியிலிருந்து பேட்டைவாய்த்தலை சென்ற்கான பேருந்து பயணச்சீட்டு அவரது சட்டை பாக்கெட்டிலிருந்தது. திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story