வையம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

வையம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி ஊராட்சி வளையப்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் நந்தகுமாா்(23). இவா், ஞாயிற்றுக்கிழமை கே.புதுக்கோட்டை ஊராட்சி துலுக்கம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் மிக்ஸியை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் நந்தகுமாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story