சாலை விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி
விபத்து
திருச்சி அருகே மல்லாட்சிபுரத்தில் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி முத்தரசநல்லூா் எம். கூடலூா் ஆகாஷ் நகரைச் சோ்ந்தவா் வரதராஜன் - அருணாதேவி தம்பதியின் மகன் தீனா (எ) தினேஷ்குமாா் (26). பட்டயப் படிப்பு முடித்துவிட்டு பைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருச்சிக்குச் சென்றுவிட்டு திரும்பினாா். திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் மல்லாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவரைக் கொண்டு சென்றபோது மருத்துவா்கள் தினேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story