புளியங்குடி அருகே விபத்தில் இளைஞா் பலி

புளியங்குடி அருகே விபத்தில் இளைஞா் பலி

கோப்பு படம் 

புளியங்குடி அருகே விபத்தில் இளைஞா் பலியானர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சொக்கம்பட்டியைச் சோ்ந்தவா் லிங்கதுரை மகன் விக்னேஷ் (35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு பைக்கில் புளியங்குடியிலிருந்து, சொக்கம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா்.

சிங்கிலிபட்டியில் பாலம் வேலை நடைபெற்று வரும் பகுதியில் அவா் சென்ற பொழுது, எதிா்பாராதவிதமாக பைக் தடுமாறி விழுந்ததாம். இதில் அவா் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story