தலைவாசல்: மினிவேன் மோதி விபத்து -ஒருவர் பலி

தலைவாசல்: மினிவேன் மோதி விபத்து -ஒருவர் பலி

கோப்பு படம்

கெங்கவல்லி அருகே மினிவேன் பைக் மீது மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கெங்கவல்லி:தலைவாசல் அருகே காமக்கா பாளையத்தை சேர்ந்த நாராயணன் மகன் பெரியசாமி, 32. கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு, 'ஹீரோ' பைக்கில், தாய் மாரியம்மாள், 55, அக்காவின், 13 வயது மகன் சந்தோஷ் ஆகியோருடன், தலை வாசலில் இருந்து காமக்காபா ளையத்துக்கு சென்று கொண்டி ருந்தார்.

மும்முடி பஸ் ஸ்டாப்பில் சென்றபோது, மினி சரக்கு வேன், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப் பட்ட பெரியசாமி, சந்தோஷ், அந்த வழியில் எதிரே வந்த, 'வேகனர்' காரின் அடிப்பகுதியில் விழுந்தனர். அப்போது கார் சக்கரத்தில் சிக்கிய பெரியசாமி உடல் நசுங்கி உயிரிழந்தார்.சிறுவனுக்கு இரு கால்களும் முறிந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மாரியம்மாள் காயத்துடன் தப்பினார் தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story