மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி!

மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி!

பைல் படம் 

போளூர் அருகே மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாவலன் (வயது 19) தனியார் கல்லுாரி மாணவர்.கடந்த 7ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிய நிலையில் விவசாய நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பலியானது தெரியவந்தது.வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க, ராஜேந்திரன் ரகசியமாக மின்வேலி அமைத்துள்ளது தெரியவந்தது.இதுகுறித்து போளூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story