ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த இளைஞர் தற்கொலை

ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மூலமங்கலம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்த மறைந்த முனுசாமி மகன் ஜீவா வயது 23. இவர் சென்னையில் உள்ள டி.சி.எஸ். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அண்மைக்காலமாக, இவர் வீட்டில் இருந்தவாறு பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 3:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று இருந்த ஜீவாவின் தாயார் லட்சுமி வயது 44 என்பவர், மாலையில் வீடு திரும்பிய போது, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஜீவாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story