நீரில் மூழ்கி இளம்பெண் பலி!

நீரில் மூழ்கி இளம்பெண் பலி!

 வழக்கு

விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற இளம்பெண் உயிரிழந்தார்.

விராலிமலை ஒன்றியம் குளவாய்ப் பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகள் நீமா (18). திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை வரலாறு 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை தனது தோழிகளுடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற நீமா நீரில் மூழ்கினார்.

இதை பார்த்த தோழிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த விவசாயிகள் சிலர் கிணற்றில் குதித்து நீமாவை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story