கரூர் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற இளம் பெண் மாயம்

கரூர் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற இளம் பெண் மாயம்

இளம்பெண் மாயம்

கரூர் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற இளம் பெண் மாயமனதாக தாய் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், தளவாய் பாளையம் பஜார் தெருவை சேர்ந்தவர் ஜான் நெல்சன். இவரது மகள் ஹரிணி வயது 24. இவர் கடந்த மே 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளார்.ஆனால், வீட்டிற்கு திரும்பவில்லை, ஹரிணி வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது தோழியரிடம் விசாரித்தும்,

உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால்,தனது மகளை காணவில்லை என அவரது தாயார் நளினி வயது 49 என்பவர், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான ஹரிணியை தேடி வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story