நகைக்கடையில் பணியாற்றிய இளம்பெண் திடீர் மாயம்!

நகைக்கடையில் பணியாற்றிய இளம்பெண் திடீர் மாயம்!

 மாயம்

வேலூரில் காணாமல் போன இளம் பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் வேலூரில் ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 29-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு தூங்க சென்றார். மறுநாள் அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை.

உறவினர், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அவரது தாயார் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story