குடவாசல் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

குடவாசல் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

சங்கர் கணேஷ்

பரிகாரம் செய்வதற்காக கோவில் குளத்திற்கு சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தேதியூர் மேல அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் ஜெயகார்த்திக். இவரது மகன் சங்கர் கணேஷ், 18. இவர் தனது தாயார் உமா பார்வதியுடன் திருவீழிமழலை வீழிநாத சுவாமி கோவில் குளத்திற்கு பரிகாரம் செய்வதற்காக சென்றார். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story