சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில இளைஞருக்கு அடி உதை !

சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில இளைஞருக்கு அடி உதை !

வாக்குவாதம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீக்கில் என்ற இளைஞர் மீது கோவில் பணியாளர்கள் . தாக்குதல் நடத்தியதில் ரத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் என்ற இளைஞர் தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்துள்ளார் இந்நிலையில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள சென்ற அவர்களை பேரிகார்டர் தாண்டி உள்ளே வந்ததாக கூறி அங்கு பணியில் இருந்த கோவில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் இந்நிலையில் நிக்கில் குடும்பத்தில் நிக்கிலுக்கு தமிழ் தெரியும் என்பதால் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து பிரச்சனையை தீர்க்க முற்பட்டுள்ளனர் ஆனால் காவல்துறை முன்பே சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் குடும்பத்தாரை தரக்குறைவாக பணியில் இருந்த கோவில் பணியாளர் கூறியதாக நிகில் தெரிவித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த நிலையில் எதற்காக தரக்குறைவாக பேசுகிறீர்கள் என பணியில் இருந்த கோவில் பணியாளரை நிக்கில் கேட்டபோது திடீரென வாக்குவாதம் கைகலப்பாக முற்றியது பணியில் இருந்த கோவில் பணியாளர் தாக்கியதில் நீக்கிலுக்கு நெத்தி பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு பின் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் சென்று சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து பணியில் இருந்த கோவில் பணியாளரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் தெரிவிக்கும்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது மேலும் இரு தரப்பினர் மீதும் தவறு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் தற்போது காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல கிலோமீட்டர்கள் கடந்து பீகாரிலிருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்து எங்களுக்கு இங்கு கோவில் பணியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்ன நிக்கில் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்

Tags

Next Story